எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம்…. இலங்கை அரசு அறிவிப்பு….!!!!!!!


இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக்கு  பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவு வருகிறது. நிலக்கரி வாங்க பணமில்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத நிலையில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில்எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தி இருக்கிறது. அதாவது கியூ ஆர் கோடு ஸ்கேனிங் மூலம் பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கவும் கள்ள சந்தையில் விற்கவும் முடியாது என கூறப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.