தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர்…. என்ன காரணம்….?? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!


கணவன்-மனைவி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியில் குப்பன்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குப்பன் கூறியதாவது, நான் சோழசிராமணி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கூலித்தொகையை முழுமையாக வழங்கவில்லை.எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.