“1 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை”…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….


பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது.

இதனால்  அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.