தொடர்ந்து பெய்த மழை…. சாலையில் தேங்கும் மழைநீர்…. கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை….!!


சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு பகுதியில் வீரகோவில் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற போதிய வடிகால் வசதி செய்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையில் சற்று தொலைவில் படவேடு கமண்டல நதி ஓடுகிறது. இந்த மழை நீரை வெளியேற்ற அருகில் செல்லும் கமண்டல நதி வரை கால்வாய் அமைத்தால் போதுமானது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.