கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் இருக்கிறது. இவற்றில் உலாந்தி வனச்சரகத்தில் கோழிக முத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் இருக்கிறது. இங்கு மொத்தம் 26யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது யானைகளுக்கு பயிற்சியளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் இருக்கின்றனர். இம்முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சியளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை அமைச்சகம் கஜ்கவ்ரவ் விருதை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறியிருப்பதாவது “ஆனை மலை புலிகள் காப்பகத்தில் மலசர் இனத்தவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் பல பகுதியில் யானை – மனித மோதல் ஏற்பட்ட பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் டாப்சிலிப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தபடுகிறது. சம வெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்கப்பட்டு கோழிக முத்தி முகாமில் சிறப்பாக பழக்கப்படுத்தபட்ட பிறகு கும்கியாக மாற்ற பயிற்சியளிக்கப்படுகிறது. அவற்றில் சின்ன தம்பி யானையும் ஒன்று.
இதனிடையில் மலசர் இனத்தவர் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். இந்தியாவிலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து திகழும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமிலுள்ள மாவூத்கள் மற்றும் காவடிகள் போன்றோரை கவுரவிக்கும் வகையில் யானைகளை பராமரிக்கும் பணியிலுள்ள மலசர் இன மக்களுக்கு கஜ் கவ்ரவ் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்விருது மலசர் இன மக்களில் சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் 5 பேரை தேர்வுசெய்து அவர்களுக்கு வரும் 12 -ம் தேதி உலக யானைகள் தினத்தன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவில் வைத்து வழங்க இருப்பதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விருது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வருடத்திலேயே அந்த விருதை ஆனை மலை புலிகள் காப்பகம் பெறுவது மகிழ்ச்சியளிப்பதோடு பெருமையாக இருக்கிறது” என்று அவர்கள் கூறினர்.
The post “கோழிகமுத்தி யானைகள் முகாம்”…. பணியை பாராட்டி மலசர் இனத்தவர்களுக்கு விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!! appeared first on Seithi Solai.