தலைக்கேறிய மதுபோதை…. தோசை கல்லால் மனைவியை தாக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!


மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வயலிமிட்டா கிராமத்தில் சண்முக பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிகண்டன்(30) என்ற மகன் உள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த மணிகண்டன் ராமலட்சுமியை தோசை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ராமலட்சுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.