வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!


மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மூவிருந்தாளி கிராமத்தில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கோமதி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.