“சேலத்தில் இளைஞரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு”….. மூன்று பேர் கைது….!!!!!


சேலத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சந்தோஷ்குமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 700 மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

இதையடுத்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கதிர்வேல், நடராஜ், மிதின் குமார் உள்ளிட்டோர் சந்தோஷ் குமாரை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்து சென்றது தெரியவந்ததையடுத்து கைது போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

The post “சேலத்தில் இளைஞரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு”….. மூன்று பேர் கைது….!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.