“மாஜி கணவருடன் வாழ்ந்த வீடு”…. சொந்தமாக வாங்கி வாழ்ந்து வரும் சமந்தா….!!!!


நாகா சைதன்யாவுடன் வசித்து வந்த வீட்டை மீண்டும் வாங்கியுள்ளார் சமந்தா. 

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு தனி வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நாக  சைத்தன்யாவும்  சமந்தாவும் பிரிவதாக அறிவித்தார்கள். இதனால் இருவரும் சேர்ந்து வாங்கி வசித்து வந்த வீட்டை விற்றார்கள். இந்த நிலையில் சமந்தா விற்ற விலையை விட அதிகம் பணம் கொடுத்து மீண்டும் அந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் முரளி மோகன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். விவாகரத்திற்கு பிறகு சமந்தா குறித்து பல வதந்திகள் பரவியது. இந்நிலையில் ரசிகர்கள் சமந்தா ஒரு செல்ப் மெட் வுமன் என பாராட்டி வருகின்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.