கழுத்தை அறுத்து கொலை…. விவசாயின் மகன் புகார்…. போலீஸ் விசாரணை….!!


விவசாயி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மறவபட்டி கிராமத்தில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் நல்லதம்பி தனது தோட்டத்திற்கு சென்று விட்டு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி நல்லதம்பியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நல்லதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து கொலை நடந்த இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மோப்பநாய் வரவழைத்து அதன் மூலம் துப்புதுலக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை எதற்காக நடந்தது என இதுவரை தெரியவில்லை. இதற்கு முன்விரோதம் காரணமா இல்லை சொத்து தகராறால் கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கழுத்தை அறுத்து கொலை…. விவசாயின் மகன் புகார்…. போலீஸ் விசாரணை….!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.