என்னங்க இது…? இப்படி மிரட்டுறாங்க…… பிரபல டிவி நடிகர், நடிகை புகார்……!!!!


வாங்காத கடனுக்கு தனியார் வங்கியில் இருந்து மிரட்டல் வருவதாக பிரபல சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி மற்றும் பிரபாகரன் தம்பதி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் அஞ்சலியின் தந்தை மாத தவணையில் செல்போன் வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அவர் 2020ம் ஆண்டே இறந்துவிட்ட நிலையிலும் தற்போது தங்களை சிலர் பொன் செய்து பணத்தை கட்ட சொல்லி மிரட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் காவல்துறை, வழக்கறிஞர்கள் போன்ற பெயரிலும் மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.