சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எறிந்தது….. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணா சாலையில் சென்ற போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங் உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்து வந்து தேனாம்பேட்டை தீயணைப்பு துறை  வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருந்த போதிலும் காரின் முன் பகுதி முழுவதும் ஏறிந்து நாசமாகியுள்ளது. மேலும் காரின் இன்ஜினில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக காரி தீ பிடித்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.