“ஜனாதிபதிபதிக்கு வாழ்த்து” இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பும் சீனா…. அதிபர் ஜி ஜின்பிங் தகவல்….!!!


இந்திய ஜனாதிபதிக்கு சீனா அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்முவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதன் பிறகு சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள் என்பதால், இருநாட்டு மக்களின் அடிப்படை நன்மைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. மேலும் 2 நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், அரசியல் பரஸ்பர உறவுகளை கையாளவும், இரு தரப்பு உறவுகளை சுமுகமான முறையில் கொண்டு செல்லவும், நான் ஜனாதிபதி முர்முவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறினார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.