சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழுவன்பொட்டல் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 16 பேருடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிருஷ்ணனின் குடும்பத்தினர் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வேலாயுதபுரம் விலக்கு அருகே வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்தையா என்பவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த 15 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா(12), நதிமாறன்(3) ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர். மற்ற 13 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0