வறுமையால் வாடிய குடும்பத்தினர்…. மகளுடன் விஷம் குடித்த தாய்…. பெரும் சோகம்…!!


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குட்டிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கலைவாணி(22) உள்பட 3 மகள்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜ் இறந்து விட்டதால் குட்டி ராணி தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வறுமையால் வாடிய குட்டிராணியும், கலைவாணியும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார். குட்டி ராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.