கிணற்றில் மிதந்த சடலங்கள்…. விவசாயிகள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!


குளிக்கச் சென்ற போது கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்துமேடு கள்ளுகடை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்தக் கிணற்றில் 2 ஆண்களின் உடல்கள் தண்ணீரில் மிதந்தன. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் சடலமாக மிதந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சடலமாக மிதந்த 2 பேரையும் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் வசிக்கும் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக வேலைபார்க்கும் வேல்முருகன், வேப்பம்பட்டி பகுதியில் வசிக்கும் டிரைவரான அப்பு என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நண்பர்களான இவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கிணற்றில் மது அருந்தி விட்டு குளிக்கச் சென்ற போது மதுபோதையில் தவறி விழுந்து இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.