மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது 4 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வியாபாரியை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வியாபாரிக்கு 20000 ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
Post Views:
0