தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகைகள், படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்த போதிலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அந்த அளவு கிடைப்பதில்லை. பல முன்னணி நடிகைகள் தமிழ் திரையுலகை விட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு முதல் காரணம் தமிழ் திரையுலகில் இளம் வயது நடிகைகளின் வரத்து அதிகமானதே காரணமாகும். அதுவே பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்துள்ளது. அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவியம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரபல நடிகை மியா ஜார்ஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை மற்றும் சசிகுமாரின் வெற்றிவேல் போன்ற படங்கள் தான் இவருக்கு சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்று தந்தது.

அது மட்டுமின்றி நல்ல உயரம் அழகாக இருந்த அம்மினிக்கு ஏனோ ஒரு சில படங்களுக்கு மேல் பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இதன் காரணமாக மீண்டும் மலையாளத்திற்கே திரும்பிய நடிகை 25-படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிதுள்ளதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் பிரபலமாக இருக்கும் இவர் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்து கொண்டார்.

மேலும் அந்த வகையில் கடந்த வருடம் மே மாதம் அஸ்வின் பிலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் நடந்ததே பலருக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.இவர் கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்து இருந்த மியா தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகனுக்கு லூகா ஜோசப் பிலீப் என பெயர் சூட்டியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.
