அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள்!! அது தான் என் வாழ்கையில் செய்த மிகப்பெரிய தவறு!! கண்ணீர் விடும் பிரசாந்த்.

தமிழ் சினிமாவில் “வைகாசி பொறந்தாச்சி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார்.

ஒரு காலக்கட்டத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட பிரசாந்த், 2003 ஆம் ஆண்டு வெளியான “வின்னர்” படத்திற்குப் பிறகு ஹிட் படமே கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இதன்பின்னர், அவரின் “ஜானி”, “சாகசம்” போன்ற படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான தெலுங்கு பட டீசர் ஒன்றில், அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர். மேலும், அவர் மீண்டும் வெற்றி படங்களைத் தரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் ஆதரவு கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் முதல் முறையாக அவரது மனைவி பற்றி கூறியிருந்தார். திருமணம்தான் இவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்றும், என் மனைவி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவள், அதை மறைத்து என்னுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

மேலும் இதை அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைத்ததாகவும், தெரிவித்திருந்தார். தற்போது இவரும் தன் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.